ஆப்நகரம்

பிலிப்பைன்ஸ் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: பலி 36

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் உள்ள உணவு விடுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டிடத்திற்கு தீ வைத்ததில் 36 பேர் பலியாயினர்.

TNN 2 Jun 2017, 11:57 am
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் உள்ள உணவு விடுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டிடத்திற்கு தீ வைத்ததில் 36 பேர் பலியாயினர்.
Samayam Tamil dozens dead after gunman torches philippine casino police
பிலிப்பைன்ஸ் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: பலி 36


இவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி இறந்ததாக மணிலா தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் வியாழக்கிழமையன்று இரவு முகமூடி அணிந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

உடனடியாக, அந்நாட்டு ராணுவத்தினரும் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்பு இந்த தாக்குதலில் யாரும் இறக்கவில்லை என்றும், பின்னர் மூச்சுத்திணறி 36 பேர் இறந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் புகை மண்டலம் மற்றும் வாடிக்கையாளர்களின் பீதியைப் பயன்படுத்தி அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.

அடுத்த செய்தி