ஆப்நகரம்

சிரியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி..!

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் பலியாகியுள்ளனர்.

TNN 17 Oct 2016, 8:03 pm
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil dozens dead in aleppo airstrikes including 14 from same family
சிரியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி..!


சிரியாவின் அலப்போ நகரம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது.இந்நகரத்தை ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க சிரிய ராணுவமும்,ரஷ்யபடைகளும் இணைந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தன.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியானற்கு கண்டனங்கள் கிளம்பியதால்,சிறிது காலத்திற்கு இரு தரப்பிற்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் திடீரென முறித்துக் கொள்ளப்பட்டதால்,சிரியா மற்றும் ரஷ்யா விமானங்கள் அலப்போ நகரில் குண்டு மழை பொழிந்தன.இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக அங்கு செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் இந்த தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.இதில் பிறந்து ஒன்றரை மாதமான இரு குழந்தைகளும்,எட்டு வயதுக்கு குறைவான ஆறு குழந்தைகளும் அடங்குவர்.ஆனால் இந்த உயிரிழப்புகளை மறுத்துள்ள ரஷ்ய படைகள்,ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும்,மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளது.

English Summary:

Dozens dead in Aleppo airstrikes, including 14 from same family

அடுத்த செய்தி