ஆப்நகரம்

கடலில் மிதக்கும் சவப்பெட்டிகள்.. பதறவைக்கும் பகீர் சம்பவம்!

கடலில் மிதந்து வரும் சவப்பெட்டிகள்.. பதறவைக்கும் பகீர் பின்னணி.

Samayam Tamil 24 Feb 2021, 4:39 pm
கடலில் சவப்பெட்டிகள் மிதந்துகொண்டிருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இத்தாலியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவப்பெட்டிகள் மிதந்து வந்ததன் பின்னணி என்ன?
Samayam Tamil dozens of coffins float away after landslide struck italian cliff cemetry
கடலில் மிதக்கும் சவப்பெட்டிகள்.. பதறவைக்கும் பகீர் சம்பவம்!


நள்ளிரவில் நடந்த சம்பவம்

இத்தாலி நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கமோக்லியிலதிகாலை 3 மணியளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடலோரத்தில் இருக்கும் மலைக்குன்றில் இருந்த கல்லறைத் தோட்டம் சரிந்து கடலுக்குள் விழுந்தது.

அந்த பகீர் காட்சி

கல்லறைத் தோட்டம் சரிந்து கடலில் விழுந்ததால் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் மிதந்து கொண்டிருந்தன. மேலும், கல்லறைத் தோட்டத்திற்கு அருகே இருந்த இரண்டு தேவாலயங்களும் இடிந்து விழுந்தன. இந்த கல்லறைத் தோட்டம் 150 ஆண்டுகள் பழைமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

​ஷாக் படங்கள்

இந்த சம்பவம் தொடர்பான படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், மலைக் குன்றில் இருந்து சவப்பெட்டிகளும், மற்ற சிதைவுகளும் 160 அடிக்கு கீழ் மிதந்து கொண்டிருப்பது தெரிகிறது.

​பீதியில் மக்கள்

கீழே விழுந்த சவப்பெட்டிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில் ஏராளமான சவப்பெட்டிகள் கடலுக்குள் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் உள்ளூர்வாசிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்கள் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களின் சவப்பெட்டிகளும் மறைந்திருக்குமோ என அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி