ஆப்நகரம்

பிலிப்பைன்சில் அடுத்தடுத்த சரணடைந்த அதிகாரிகள்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து கடத்தலில் பங்கிருப்பதாக கருதப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தாங்களாகவே சரணடைந்துள்ளனர்.

TNN 9 Aug 2016, 10:21 pm
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து கடத்தலில் பங்கிருப்பதாக கருதப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தாங்களாகவே சரணடைந்துள்ளனர்.
Samayam Tamil dozens of philippine officials surrender after being linked to drugs trade
பிலிப்பைன்சில் அடுத்தடுத்த சரணடைந்த அதிகாரிகள்..!



பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக சமீபத்தில் பதவியேற்ற ரோட்ரீகோ டுடர்டே,அந்நாட்டில் உள்ள போதை மருந்து கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது மட்டுமின்றி,ஏற்கனவே போதை மருந்து கடத்தல் தொடர்பாக சிறையிலிருக்கும் பலருக்கு மரண தண்டனையையும் நிறைவேற்றியுள்ளார்.


இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சில அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்ட ரோட்ரீகொ,இந்த அதிகாரிகளுக்கு போதை மருந்து கடத்தலில் தொடர்பிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் அதிகாரிகள்,தாங்களாகவே வந்த சரணடைந்துள்ளனர்.இவர்களில் நகர மேயர்கள்,காவல் துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் அடங்குவார்கள்.அவர்களில் சிலர் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ரோட்ரீகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.


இந்நிலையில் ரோட்ரீகோ வெளியிட்ட பட்டியலில் இருக்கும் நீதிபதிகள்,பிடியாணை இல்லாமல் தாங்களாவே சரணடைய வேண்டாம் என பிலிப்பைன்ஸ் நாட்டு உச்சநீதிமன்றம் அந்நாட்டு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி