திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் மற்றும் திராவிட மொழிக்குடும்பம் சுமார் 4,500 வருடங்கள் பழமையானது என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த, மேக்ஸ் ப்லாங்க் இன்ஸ்டிடியூட் மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகம் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் அமைந்துள்ள வைல்ட்லைஃப் ஆய்வு நிலையம் இணைந்து, உலகின் பழமையான மொழிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது.
திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ள ஏராளமான மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழைமையானது என்பது தெரியவந்துள்ளது. Royal Society Open Science என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் மேற்கு ஆஃப்கானிஸ்தானிலிருந்து, கிழக்கு பங்களாதேஷ் வரை ஏறக்குறைய 600 மொழிகள் தோன்றியிருப்பதும், அதில் திராவிடம், இந்தோ- யுரோப்பியன், சீனோ- திபெத்தியன் என ஆறு பெரிய மொழிக்குடும்பங்களும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
220 மில்லியன் மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பம் 80 பிரிவுகளாக இருப்பதும், தென்னிந்தியா, மத்திய இந்தியா பகுதிகளில் அதிகமாக வழக்கிலிருப்பதும் தெரியவந்துள்ளது. திராவிட மொழி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என நான்கு பெரிய மொழிகளான உள்ளடக்கியிருந்தாலும் தமிழ் மொழி முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள தெரிவித்துள்ளனர்.
மேலும் திராவிட மொழிகள், சமஸ்கிருதம் போல காலப்போக்கில் வழக்கொழிந்துப் போகாமல் பண்டைக்காலத்துக்கும் நவீன யுகத்துக்கும் இடையில் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர் Annemarie Verkerk கூறியுள்ளார்.
திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து உறுதியாக கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றமும் பரவலும் குறித்து ஆராய்வதற்காக 20 திராவிட இனங்களின் வரலாறு குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாக Wildlife Institute of Indiaவின் ஆராய்ச்சியாளர் விஷ்னு பிரியா கூறினார்.
திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழைமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாசார மேம்பாடுகளில் ஆரம்பகாலகட்டமும் ஒத்துப்போவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதன்மூலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே, ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ள ஏராளமான மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழைமையானது என்பது தெரியவந்துள்ளது. Royal Society Open Science என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் மேற்கு ஆஃப்கானிஸ்தானிலிருந்து, கிழக்கு பங்களாதேஷ் வரை ஏறக்குறைய 600 மொழிகள் தோன்றியிருப்பதும், அதில் திராவிடம், இந்தோ- யுரோப்பியன், சீனோ- திபெத்தியன் என ஆறு பெரிய மொழிக்குடும்பங்களும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
220 மில்லியன் மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பம் 80 பிரிவுகளாக இருப்பதும், தென்னிந்தியா, மத்திய இந்தியா பகுதிகளில் அதிகமாக வழக்கிலிருப்பதும் தெரியவந்துள்ளது. திராவிட மொழி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என நான்கு பெரிய மொழிகளான உள்ளடக்கியிருந்தாலும் தமிழ் மொழி முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள தெரிவித்துள்ளனர்.
மேலும் திராவிட மொழிகள், சமஸ்கிருதம் போல காலப்போக்கில் வழக்கொழிந்துப் போகாமல் பண்டைக்காலத்துக்கும் நவீன யுகத்துக்கும் இடையில் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர் Annemarie Verkerk கூறியுள்ளார்.
திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து உறுதியாக கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றமும் பரவலும் குறித்து ஆராய்வதற்காக 20 திராவிட இனங்களின் வரலாறு குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாக Wildlife Institute of Indiaவின் ஆராய்ச்சியாளர் விஷ்னு பிரியா கூறினார்.
திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழைமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாசார மேம்பாடுகளில் ஆரம்பகாலகட்டமும் ஒத்துப்போவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதன்மூலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே, ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.