ஆப்நகரம்

வண்டி ஓட்டிக் கொண்டே சிகரெட்டை தூக்கிப் போட்டதால் விபரீதம்; முதலுக்கே மோசமான சோகம்!

பெய்ஜிங்: ஓட்டுநர் சிகரெட் பிடித்து விட்டு, தூக்கி எறிந்ததால் விபரீதம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2018, 4:22 pm
தென்கிழக்கு சீனாவில் டிரக் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டே சிகரெட் பிடித்துள்ளார். பின்னர் அதனை தூக்கி வெளியே எறிந்துள்ளார். அந்த சிகரெட் அவரது வண்டியின் பின்புறம் விழுந்து தீப்பிடித்துள்ளது.
Samayam Tamil Cigaratte


இதைக் கண்ட வாகன ஓட்டிகள், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு தெரிவித்தனர். உடனே வாகனத்தை நிறுத்தினார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எறியத் தொடங்கியது. பின்னர் அப்பகுதி மக்கள் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓட்டுநர் பெயர் ’வு’ என்று தெரியவந்துள்ளது. பின்புறம் தீப்பிடித்ததால், அதிலிருந்த பிளாஸ்டிக் கொள்கலன்கள், இரண்டு சைக்கிள்கள் சேதமடைந்தன.

யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதுதொடர்பான செய்தி சவுத் சீனா மார்னிங் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி