ஆப்நகரம்

சுறா மீனிடமிருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய மனிதர்.! திகில் வீடியோ..

சுறா மீன் அருகில் இருப்பதை அறியாமல் கடலில் நீந்திக்கொண்டிருந்த ஒருவரது வீடியோ காட்சி வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 20 Sep 2019, 1:49 pm
கடல் என்றாலே பொதுவாக அனைவரது மனதிலும் ஒரு ஆனந்தம் வெளிப்படும். காற்று, அமைதி, அலைகள் ஓசை என சுவாரசியங்கள் நிறைந்த கடலில் அதி பயங்கரங்களும் உள்ளது. அதற்குத்தான் கடல் அழகை அதன் கரையிலிருந்தே ரசிக்கச் சொல்கிறார்கள்.
Samayam Tamil 22222222


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள வெர்றி கடற்கரையில்தான் இந்த நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நபர் ஆனந்தமாய் ஒரு மிதவையில் படுத்துக்கொண்டு கடலை நோக்கி முன்னேறுகிறார். இந்த நிகழ்வை ட்ரோன் மூலம் ஒருவர் வீடியோ எடுத்து வருகிறார்.
சற்று நேரத்தில் கடலில் நீந்திச் செல்லும் அந்த நபரின் கீழ், சிறிது ஆழத்தில் சுறா மீன் ஒன்று வருகிறது. அதை அறியாமல் அந்த நபர் தொடர்ந்து நீந்தி செல்கிறார். இதனைச் சுதாரித்துக் கொண்ட ட்ரோன் ஆபரேட்டர் ஒலிபெருக்கி மூலம் அந்த நபருக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்.

இதனைக் கேட்டதும் அந்த நபர் கடற்கரை நோக்கித் திரும்புகிறார். ஆழத்திலிருந்து கரையை நோக்கி வந்த சுறா மீன் மீண்டும் யு டர்ன் அடித்து கடலுக்குள் செல்கிறது. சரியான நேரத்தில் அந்த நபர் கரைக்குத் திரும்பியதால் சுராவிடம் இருந்து தப்பினார். இந்த காட்சி ட்ரோன் கேமராவால் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி