ஆப்நகரம்

ஏமனில் அல் கொய்தா இயக்கத்தினர் மீது விமான தாக்குதல்; 5 பேர் பலி

ஏமன் நாட்டில், அல் கொய்தா இயக்கத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டனர்.

TNN 25 Aug 2016, 2:56 am
ஏமன் நாட்டில், அல் கொய்தா இயக்கத்தினர் மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil drone strikes kill 5 qaeda suspects in yemen security
ஏமனில் அல் கொய்தா இயக்கத்தினர் மீது விமான தாக்குதல்; 5 பேர் பலி


அந்நாட்டில் அல் கொய்தா இயக்கத்தினர் செல்வாக்கு பெற தொடங்கியுள்ளனர். பல இடங்களில், வன்முறை சம்பவங்களையும் அவர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இதையடுத்து, அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ஏமன் அரசு படைகள் சார்பாக, ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதன்படி, இன்று ஏமனின் தெற்கே உள்ள பாலைவன பிரதேசமான மாரிப்பில் சென்றுகொண்டிருந்த அல் கொய்தா இயக்கத்தவரின் கார்கள் மீது ஆளில்லா விமானங்கள் குண்டுவீசி தாக்கின. இதில், 5 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக, தெரியவந்துள்ளது. அவர்கள், அல் கொய்தா அமைப்பின் ஏமன் பிரிவு தலைவர்களாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி