ஆப்நகரம்

24 மணி நேர ஆளில்லா ‘நம்பிக்கை’ நூல் நிலையம்!

ஒரு நாளின் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் ஆளில்லா புத்தகக் கடை துபாயில் திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Mar 2018, 2:59 pm
ஒரு நாளின் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் ஆளில்லா புத்தகக் கடை துபாயில் திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Dubai_bookstoremar27


ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான துபாயில் துபாய் மெரினா என்ற இடத்தில் உள்ளது இந்தப் புத்தகக் கடை. நம்பிக்கை நூல் நிலையம் (Trust Book Shop) என்றும் அழைக்கப்படும் இந்த புத்தகக் கடையின் பெயர் புக் ஹீரோ (Book Hero).

இந்தக் கடையில் ஒருவர்கூட வேலைக்கு அமர்த்தப்படவில்லை. புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் புத்தகங்களில் ஒட்டியுள்ள ஸ்டிக்கரில் உள்ள குறிப்பிட்டிருக்கும் தொகையை ஒரு பெட்டியில் போட்டுவிட்டு புத்தகத்தை எடுத்துச்செல்லலாம்.

“புத்தகத்தை யாரும் திருடுவது இல்லை. அப்படித் திருடப்பட்டாலும்… அதனால் நஷ்டமாகும் தொகை கடையில் வேலையாட்களை அமர்த்தி அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதைவிட அதிகமாக இருக்காது.” என்று இக்கடையின் உரிமையாளர் மாட்ஸ்டெரா மார்ட்டின் கூறுகிறார்.

மாட்ஸ்டெரா எமிராட்டி என்ற நிறுவனத்தின் முகமது அப்துல்லா என்ற தொழில்முனைவோருடன் இணைந்து இந்தக் கடையைத் தொடங்கியுள்ளார். அப்துல்லாதான் வாடிக்கையாளர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படி ஒரு கடையைத் தொடங்க யோசனை சொன்னாராம்!

அடுத்த செய்தி