ஆப்நகரம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சென்னைக்கு ஆபத்து?

இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டா் அளவுகோளில் 7.3ஆக பதிவு. கட்டிடங்கள் குழுங்கியதால் பொதுமக்கள் அச்சம்.

Samayam Tamil 24 Jun 2019, 11:44 am
இந்தோனேசியாவில் இன்று 7.3ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்ற நிலையிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Samayam Tamil Sea level


பசிபிக் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமாா் 200 கி.மீ. தெற்கில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி காலை 11.53 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோளில் 7.3ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குழுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடா்பான விவரம் வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

நிலநடுக்கம் தொடா்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில் “இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் பாலியிலும் உணரப்பட்டது”.

நிலநடுக்க அதிா்வுகள் ஆஸ்திரேலியாவின் டாா்வின் நகரத்திலும் உணரப்பட்டதாகவும், மக்கள் வீடுகளிலிருந்து சாலைக்கு வந்ததாகவும் ஊடகங்களில் தொிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசாயவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடா்ச்சியாகவே சென்னையில் சுனாமி தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி