ஆப்நகரம்

ஈரானில் நிலநடுக்கம்: 2 பேர் பலி!!

ஈரானின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு 2 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 8 May 2020, 12:31 pm
ஈரானின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 5.1 நிலநடுக்கத்திற்கு 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil நிலநடுக்கம்


இன்று அதிகாலை மக்கள் உறங்கிக் கொண்டு இருக்கும்போது, தொடர்ந்து பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. உறங்கிக் கொண்டு இருந்த மக்கள் பதட்டத்தில் வீட்டை விட்டு மிரண்டு வெளியே ஓடினர். அதில் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈரானின் டெஹ்ரான், மசந்த்ரன் மாகாணத்தை ஒட்டிய எல்லையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பதட்டத்தில் மக்கள் பொது வெளியில் குவிந்தனர். இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு, மக்களுக்கு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 75 ஆயிரம் பேர் பலி

ஈரானில் இதுவரைக்கும் கொரோனாவால் 103,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,486 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை அடுத்து தங்களது வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப பங்குகளை நோக்கி மக்கள் விரைந்தனர். பங்குகளில் காஸ் இருப்பு இருப்பதாகவும், மக்கள் பதட்டம் அடைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LIVE: பிரான்ஸில் தளர்வு... பாரிஸில் கட்டுப்பாடு... பாடாய் படுத்தும் கொரோனா

இறந்தவர்களில் 21 வயது இளைஞர் டெஹ்ரானையும், 60 வயது முதியவர் தமாவந்த் பகுதியையும் சேர்ந்தவர்கள்.

அடுத்த செய்தி