ஆப்நகரம்

துருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 20 பேர் பலி... 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்

Samayam Tamil 25 Jan 2020, 5:25 pm
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. நேற்று இரவு ( 24 - 01 - 2019 ) எலாஸிக் மாகாணம் சிவிரைஸ் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 6.8 ரிக்டராக பதிவாகியுள்ளது.
Samayam Tamil earthquake kills 20 more than 500 people injured in turkey
துருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 20 பேர் பலி... 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம்...


துருக்கி நிலநடுக்கம்

6.8 ரிக்டராக பதிவாகியிருக்கும் இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எலாஸிக் மாகாணத்தையும் சேர்த்து மொத்தம் நான்கு மாகாணத்தை இந்த நிலநடுக்கம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கி நிலநடுக்கம்

வீடுகளை இழந்துள்ள மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அங்கு முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகாமையிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிறு காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படுகிறது

துருக்கி நிலநடுக்கம்

சிவிரைஸ் நகரில் ஏற்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 30 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் விவரங்களை சேகரித்துள்ள மீட்பு படையினர் இடிபாடுகளை ஜேசிபி எந்திரங்கள் மூலம் தகர்த்தி மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

துருக்கி நிலநடுக்கம்

நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் விழுந்து 20 பேர் பலியாகியிருப்பதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் மின் கம்பிகள் அறுந்து சேதமடைந்துள்ளதால் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கம்

கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளாமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நபர்களை மீட்பு பணியினர் இன்று அதிகாலை முதலே மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

துருக்கி நிலநடுக்கம்

அடுத்த செய்தி