ஆப்நகரம்

சுனாமி தாக்குமா? ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - அலறி அடித்து ஓடிய மக்கள்!

ஆமோரி ப்ரிபெக்சர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Samayam Tamil 21 Dec 2020, 10:08 am
ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஆமோரி ப்ரிபெக்சரில் இன்று அதிகாலை 2.23 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அட்சரேகையில் 40.7 டிகிரி வடக்கே, தீர்க்கரேகையில் 142.7 டிகிரி கிழக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பான் நிலநடுக்க ஏஜென்சி (JMA) தெரிவித்துள்ளது. மேலும் ஐவாடே ப்ரிபெக்சரின் சில பகுதிகளில் 5க்கு குறைவாகவும், ஆமோரி ப்ரிபெக்சரின் சில பகுதிகளில் 4ஆகவும் பதிவாகி இருக்கிறது.
Samayam Tamil EarthQuake


அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் வேகமாக குலுங்கின.

பீச்சுக்கு வரதீங்க: ஊரடங்கை அமல்படுத்த திட்டம்!

இதனை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வேகமாக வெளியேறினர். மேலும் அலமாரிகளில் இருந்து பொருட்கள் கீழே விழுந்துள்ளன. கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களோ அல்லது பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக அணுசக்தி மையங்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்ப மையங்களில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

விரைவில் கட்சி துவங்கும் விஜய்?: இல்லைனா அப்படி ஏன் சொன்னாரு?

அனைத்தும் இயல்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான தகவல்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அடுத்த செய்தி