ஆப்நகரம்

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளை வெற்று காகிதத்தில் எழுதி தந்த அதிகாரிகளால் சர்ச்சை!

தேர்தல் முடிவுகளை காகிதத்தில் எழுதி தந்த அதிகாரிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Jul 2018, 11:57 am
இஸ்லாமாபாத்: தேர்தல் முடிவுகளை காகிதத்தில் எழுதி தந்த அதிகாரிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Pak Election Results


பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 272 தொகுதிகளுக்கான தேர்தலில் 89,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நாடாளுமன்ற தொகுதிக்கு 3,459 பேரும், மாகாண சட்டசபை தொகுதிக்கு 8,396 பேரும் போட்டியிட்டனர்.

பாதுகாப்பிற்காக 4 லட்சத்து 49 ஆயிரத்து 465 போலீசாரும், 3 லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர். நேற்று மாலை தேர்தல் முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இதன்படி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இல்லாததால், தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி, தேர்தல் முடிவுகள் படிவம் 45 மூலம் வெளியிடப்பட வேண்டும்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கி மற்றும் ஐதராபாத் தொகுதிகளில் நடந்த தேர்தல் முடிவுகளை வெற்று காகிதத்தில் எழுதி அதிகாரிகள் தந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Election Commission of Pakistan officials writes results in paper goes viral.

அடுத்த செய்தி