ஆப்நகரம்

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் நிகழந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 12 Jun 2016, 4:24 pm
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் நிகழந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil eleven members of the same family shoot dead
மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி


மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர், ஆண்கள் 4 பேர், சிறுமிகள் 2 பேர் என மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

மேலும், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த குழந்தைகள் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவத்தை அரங்கேற்றிய மர்ம நபர்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்தில இருந்து தலைமறைவாகி விட்டனர்.

துப்பாக்கிச் சூடு குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளிகளில் ஒருவர், கொலை செய்யப்பட்ட குடும்பத்து பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அப்பெண் தற்போது கர்ப்பம் தரித்துள்ளார் என்றும், அதன் காரணமாக இக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி