ஆப்நகரம்

விமானத்தில் குழந்தைகளுக்கு இலவசம்: அதிரடி ஆஃபர் வெளியிட்ட நிறுவனம்!

பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு இலவசப் பயணம் என்ற சலுகையை முன்னணி விமான சேவை நிறுவனமான எட்டிகாட் அறிவித்துள்ளது

Samayam Tamil 15 Jan 2021, 7:54 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து கடந்த ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பொது முடக்கத்தால் விமான சேவைகள் முடக்கப்பட்டதால், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த விமான சேவை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. தற்போது, விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டாலும், பொது மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


எனவே, வாடிக்கையாளர்களைக் கவர அதிக சலுகைகளை விமான சேவை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எட்டிகாட் நிறுவனம், அபுதாபி அல்லது துபாய்க்கு டிக்கெட் புக் செய்தால், பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு இலவசப் பயணம் என்ற சலுகையை அறிவித்துள்ளது.

செப்டம்பர் இறுதி வரையிலான காலத்தில் பயணிக்க ஜனவரி 28ஆம் தேதிக்குமுன் பயணச்சீட்டுப் பதிவு செய்தால் குழந்தைகளை இலவசமாக உடன் அழைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி அதிபராகவே முடியாத நிலையில் ட்ரம்ப்... பென்சன் கூட கிடைக்காதாம்!

ஒவ்வொரு பெரியவரும் தங்களுடன் ஒரு குழந்தையை இலவசமாக அழைத்துச் செல்லலாம் என்றும், 2 பெரியவர்கள் பயணச்சீட்டு எடுத்தால் அவர்களுடன் 4 குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அடுத்த செய்தி