ஆப்நகரம்

இலங்கை அமைச்சர் பெயரில் மன்மோகன் சிங் மரணம் என டுவீட்!

இலங்கை அமைச்சர் பெயரில் மன்மோகன் சிங் மரணம் என டுவீட்!

TOI Contributor 26 May 2017, 12:32 am
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்துவிட்டார் என இலங்கை வெளியுறவு அமைச்சர் பெயரில் டுவிட்டர் அக்கவுண்ட் உருவாக்கி வதந்தி பரப்பியவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
Samayam Tamil fake twitter account created under name srilanka foreign minister
இலங்கை அமைச்சர் பெயரில் மன்மோகன் சிங் மரணம் என டுவீட்!


இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணநாயகே பெயரில் மூன்று டுவிட்டர் கணக்குகள் போலியாக உள்ளன. இந்நிலையில் அவர் பெயரில் உள்ள டுவிட்டர் கணக்கில் இருந்து இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்துவிட்டார் என பதிவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தப்பதிவில் இலங்கை வெளியுறவு செய்தி தொடர்பாளரையும் டேக் செய்துள்ளனர்.

இதனையடுத்து பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ரவி இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரை அடுத்து அந்த டுவீட் உடனடியாக நீக்கப்பட்டது. இந்த விஷம செயலில் ஈடுபட்டது யார் என காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி