ஆப்நகரம்

ஸ்டான்ட் ஆப் காமெடியின் போது மேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு, துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jul 2019, 8:10 pm
துபாயில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு (36) சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார். அப்போது மேடையில் ஏறிய அவர் தன்னுடைய பெற்றோர் பற்றிய கதைகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வந்தார்.
Samayam Tamil மேடையில் மயங்கி விழுந்து திடீரென உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்
மேடையில் மயங்கி விழுந்து திடீரென உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்


மேடைப் பேச்சை முடிக்கும் முன்பு மன அழுத்தம் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார். இதுவும் நிகழ்ச்சியின் ஒரு பகுதி தான் என பார்வையாளர்கள் எண்ணினர்.

ஆனால் வெகுநேரமாகியும் மஞ்சுநாத் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அருகில் சென்று அவரை எழுப்ப முயன்றார். அப்போது தான் மஞ்சுநாத் சுயநினைவிழந்து கிடப்பது தெரியவந்தது.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மஞ்சுநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருடைய மரணம் தொடர்பாக துபாய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவருடைய உடல் உடற்கூறு ஆய்வுக்காக துபாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மஞ்சுநாத் நாயுடுவின் திடீர் மரணம் குறித்த விவரங்கள் நாளை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி