ஆப்நகரம்

பன்றியுடன் சண்டையிட்ட விவசாயியின் அந்த இடத்தை கடித்ததால் பலி

குடிபோதையில், பன்றியுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட விவசாயி அந்த இடத்தில் கடி வாங்கி பலியாகியுள்ளார்.

TNN 19 Jun 2017, 9:43 pm
குடிபோதையில், பன்றியுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட விவசாயி அந்த இடத்தில் கடி வாங்கி பலியாகியுள்ளார்.
Samayam Tamil farmer dies after getting into fight with pet pig that bites his penis off
பன்றியுடன் சண்டையிட்ட விவசாயியின் அந்த இடத்தை கடித்ததால் பலி


தென் மேற்கு மெக்சிகோவில் ஒக்‌ஷாக் மாகாணத்தின், ஒஜில்டன் பகுதியை சேர்ந்தவர் பப்லோ மிகுவல் (60). இவர் மதுபோதையில், வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவர் செல்லப்பிராணியாக வளர்த்துவரும் பன்றி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றதோடு அதை அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பன்றி, விவசாயியை தாக்கியுள்ளது. இதையடுத்து விவசாயி பன்றியுடன் சண்டையிட்டுள்ளார். அதில் பன்றி விவசாயியின் 3 விரல்களையும், அவரின் மர்ம உறுப்பையும் கடித்துள்ளது.

இதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பன்றி கடியால், அவர் உடலில் பரவிய பாக்டீரிய தொற்று அவரின் உயிரை பறித்துள்ளது. மருத்துவர்கள் முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

அடுத்த செய்தி