ஆப்நகரம்

இறந்த தாயை 10 வருடமாக மறைத்து வைத்த பெண்!

தாய் சடலத்தை 10 வருடமாக மறைத்து வைத்திருந்த பெண். அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி.

Samayam Tamil 30 Jan 2021, 6:15 pm
தனது தாயின் சடலத்தை பத்து ஆண்டுகளாக ஃப்ரீசரில் மறைத்து வைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர்.
Samayam Tamil File image


ஜப்பான் தலைநகர் டோக்யோவை சேர்ந்த பெண் யூமி யோஷினோ. இவருக்கு வயது 48. இவரது தாயார் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். ஆனால், தாயார் இறந்தது தெரிந்தால் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில், தாயின் சடலத்தை ஃப்ரீசரிலேயே 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்திருக்கிறார்.

மகளின் பெட் ரூமில் அதிர்ச்சி.. அரண்டுபோன தாய்.. அடுத்து நடந்த காமெடி!
தனது தாயுடன் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாததால், தாயார் இறந்தபிறகும் அவரது உடலை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்ததாக போலீசாரிடம் யூமி யோஷினோ தெரிவித்துள்ளார்.

யூமியும் அவரது தாயும் தங்கியிருந்த குடியிருப்பு வீட்டை, தாயாரின் பெயரில் ஒப்பந்தத்துக்கு எடுத்துள்ளனர். யூமி தொடர்ந்து வாடகை கொடுக்காமல் இருந்ததால் ஜனவரி மாதம் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மோசடி வழக்கில் சிக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. நீதிமன்ற உத்தரவால் தலைமேல் கத்தி!
இதையடுத்து யூமியின் தாயார் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை பிரதேச பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்த நேரமும், மரணத்தின் காரணமும் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி