ஆப்நகரம்

சவுதி அரேபியாவில் புதிய வரலாறு படைத்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர்!

சவுதி: விஷன் 2030 திட்டத்தின் கீழ், பல்வேறு மாற்றங்களை அந்நாடு அரசு செய்து வருகிறது.

Samayam Tamil 25 Sep 2018, 8:45 am
சவுதி அரேபியாவில் பெண் செய்தியாளர் ஒருவர், மாலை நேர செய்தி வாசித்து புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். புர்கா அணிந்த வியம் அல் தகீல் என்ற பெண், உமர் அல் நஷ்வான் என்ற ஆண் செய்தி வாசிப்பாளருடன் இணைந்து, அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான சவுதி சேனல் 1ல் செய்தி வாசித்துள்ளார்.
Samayam Tamil Saudi Reader


முன்னதாக சமையல், வானிலை குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் செய்தி வாசிப்பாளராக தற்போது தான் பெண் ஒருவர் வந்துள்ளார்.

விஷன் 2030 என்ற பெயரில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை சவுதி அரேபியா அரசு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் ஏராளமான தடைகளை நீக்கி, இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் ரியாத்தை சேர்ந்த பிளைனாஸ் என்ற விமான நிறுவனம் உதவி பைலட்டாகவும், விமான ஊழியராகவும் பணியாற்ற சவுதி பெண்களைத் தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு இருந்த நீண்ட காலத் தடையை சவுதி அரசு நீக்கியது.

Female Newsreader Makes History In Saudi Arabia.

அடுத்த செய்தி