ஆப்நகரம்

90வது பிறந்தநாளை கொண்டாடிய ஃபிடல் காஸ்ட்ரோ; அமெரிக்கா மீது சாடல்

நவீன கியூபாவின் நிறுவனரான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார்.

TNN 13 Aug 2016, 10:05 pm
நவீன கியூபாவின் நிறுவனரான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார்.
Samayam Tamil fidel castro lashes out at us for 90th birthday
90வது பிறந்தநாளை கொண்டாடிய ஃபிடல் காஸ்ட்ரோ; அமெரிக்கா மீது சாடல்


கடந்த 1958ம் ஆண்டு, கியூபாவை அமெரிக்க காலனியாதிக்கத்தில் இருந்து விடுவித்ததோடு, உலகமே வியக்கும் வகையில் சோஷலிச நாடாக அதனை கட்டமைத்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அவருக்கு உறுதுணையாக இருந்த சே குவேராவை அமெரிக்காவின் உளவு அமைப்பு சிஐஏ, பொலிவியா வனப் பகுதியில் சுட்டுக் கொன்றது. எனினும், மனம் தளராத ஃபிடல் காஸ்ட்ரோ, அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் கியூபாவை பெரும் சவாலுக்கு இடையே வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றினர்.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் மீறி, முந்தைய சோவியத் யூனியனின் பக்கபல நாடாக, கியூபா உலக அரங்கில் தலைநிமிர்ந்தது. அந்நாட்டை பல இக்கட்டான சூழலில் வழிநடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, முதுமை காரணமாக, கடந்த 2006ம் ஆண்டு, தனது சகோதரர் ராவுலை அதிபராக நியமித்துவிட்டு, பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார்.

சோஷலிச, கம்யூனிச புரட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90வது வயதை இன்று கொண்டாடினார். கியூப தலைநகர் ஹவானாவில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதன்பின் பேசிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது வாழ்நாளில் 634 முறை கூலிப் படைகளை ஏவி, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம்சாட்டினார்.

அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, இன்றளவும் உறுதியோடு தான் வாழ்வதாக, ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்தார். ஜப்பானை 2ம் உலகப் போரில் சீரழித்த அமெரிக்கா, இன்று அந்நாட்டின் நண்பனாக நடிப்பது, மிக வேடிக்கையாக உள்ளதென்றும் காஸ்ட்ரோ கூறினார். பனிப்போர் காலத்தில் இரண்டாக பிரிந்து நின்ற உலகம், தற்போது அமெரிக்காவின் கோரப்பிடியில் சிக்கி தவிப்பதாகவும், இந்நிலை விரைவில் மாறும் என நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த செய்தி