ஆப்நகரம்

30 வருஷத்துல 5 லட்சம் பேர் வெளியேற்றம் எப்படி நடந்தது? மலேசிய அரசின் அதிரடி!

மலேசியாவில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் மட்டும், 5 லட்சம் பேரை வெளியேற்றி அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Samayam Tamil 12 May 2019, 12:45 pm
மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த, கடந்த 1990ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரம் குடியேறிகள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Malaysia Refugees


சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்புவது, சட்டவிரோத குடியேற்ற பிரச்னையை கையாள்வதில் அரசு காட்டும் தொடர் அக்கறையின் காரணமாக நிகழ்வது என சாபா தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இயக்குனர் சலேஹா ஹபிப் யூசப் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில், குடிவரவுத்துறை, ராயல் மலேசிய காவல்துறை, கிழக்கு சாபா பாதுகாப்பு கட்டளை, மலேசிய கடல் அமலாக்க ஏஜென்சி உள்ளிட்டவை சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து பிடிப்பதற்கு செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு மலேசியாவின் சாபா மாநிலத்திலிருந்து 13,479 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக யூசப் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் இதுவரை 4,115 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகளை பாதுகாப்பது, வேலைக்கு அமர்த்துவது, அனுமதிப்பது மலேசியாவின் குடிவரவு சட்டத்தின்படி கடும் குற்றமாகும். இருப்பினும் மலேசியாவின் கடலோர பகுதியான சாபாவுக்குள், அருகில் உள்ள வியாட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் வரும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அடுத்த செய்தி