ஆப்நகரம்

ரத்தக் களரியான மதுபானக் கூடம்...அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Oct 2019, 7:19 pm
அமெரிக்காவில் தற்பாதுகாப்புக்காக தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் எதிர்விளைவாக, துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தனிநபர்கள் அவ்வப்போது அரங்கேற்றி வரும் கொடூரமும் அங்கு தொடர் நிகழ்வாக உள்ளது. இன்றும் அப்படியொரு சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.
Samayam Tamil gun


அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் அமைந்துள்ளது கன்சாஸ் நகரம். இந்த நகரின் 10 -ஆவது தெருவில் இயங்கி வரும் ஒர் மதுப்பான கடையில், ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். வார விடுமுறை நாள் என்பதால் மதுபான கடையில் வழக்கத்தைவிட "குடிமகன்"களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மெக்கா மசூதி புகைப்படம் ... ட்விட்டரில் வெளியிட்டு அசத்தியுள்ள விண்வெளி வீரர் !

குடிப்போதை தலைக்கேறியதோ என்னவோ? அந்த மர்ம நபர் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். அதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிவையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், இச்சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி