ஆப்நகரம்

கர்ப்பிணி பெண் உயிருடன் எரிப்பு!

தனது தம்பியை மணந்து கொண்டதால் கர்ப்பமாக இருந்த பெண்ணை உயிருடன் எரித்து கொலை செய்த கொடுமை லாகூரில் நடந்துள்ளது.

TOI Contributor 8 Aug 2016, 8:50 pm
லாகூர் : தனது தம்பியை மணந்து கொண்டதால் கர்ப்பமாக இருந்த பெண்ணை உயிருடன் எரித்து கொலை செய்த கொடுமை லாகூரில் நடந்துள்ளது. 23 வயதாகும் சிட்ரா எனும் பெண்ணுக்கு வாரிஸ் அலி என்பவருடன் நிச்சயிக்கப்பட்டது. அவர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுவிட்டதால், அவருடைய இளைய சகோதரர் வகாஸ் உடன் சிட்ராவை திருமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து திரும்பியதும் வாரிஸ் அலிக்கு திருமணம் பற்றிய செய்தி தெரிந்துள்ளது. அதிலிருந்து அந்த பெண்ணின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருடைய இளைய சகோதரருடனும் பகைமை இருந்து வந்துள்ளது.
Samayam Tamil former fiance burnt pregnant woman
கர்ப்பிணி பெண் உயிருடன் எரிப்பு!


இந்நிலையில் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில், சிட்ரா அவருடைய அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது வாரிஸ் அலி பெட்ரோலை அந்த பெண்ணின் மீது ஊற்றி தீயிட்டு தகவை மூடிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள், அந்த பெண் எரிந்து உயிரிழந்துள்ளார். சிட்ராவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வாரிஸ் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இறந்து போது அந்த பெண் கர்ப்பமாக இருந்ததாகவும் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். வாரிஸ் அலியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அலியின் உறவினர்களையும் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி