ஆப்நகரம்

பிரான்சில் கலவரம்: அவசர நிலை பிரகடனம் அமல்படுத்த முடிவு?

பிரான்சில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்த ஆலோசனை நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 2 Dec 2018, 7:40 pm
எரிபொருள் வரி உயர்வை கண்டித்து பிரான்சில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்த ஆலோசனை நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil Yellow Vest


பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கான வரி அண்மையில் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அன்றாட வாழ்வாதார பொருட்களுக்குமான விலையும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாக மாறி பல இடங்களில் மறியல், வாகனங்களுக்கு தீ வைத்ததல், கட்டங்களை அடித்து நொறுக்குதல் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் என உச்சக்கட்டமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்துக்கு யெல்லோ வெஸ்ட் (Yellow Vest) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போலீசார் மீது கற்களை வீசியும், இரும்பு ஆயுதங்களை வீசியும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மேலும், முகமூடி அணிந்து கொண்ட இளைஞர்கள் கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலைகளில் வலம் வருகின்றனர்.
இந்த கலவரத்தில் இதுவரையில் 133க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், இந்த போராட்டத்துக்கு யார் தலைமை என்பது தெரியாததால் அந்த முயற்சியும் பலிக்கவில்லை.

இந்நிலையில், அர்ஜென்டினாவில் இருக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலவரம் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் அவரச பிரகடனம் அமல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி