ஆப்நகரம்

வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அரசுக்கு வேண்டுகோள்..!!

தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதால் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் அரசுக்கு அந்நாட்டு மதகுருமார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNN 28 Jul 2016, 4:01 am
தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதால் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் அரசுக்கு அந்நாட்டு மதகுருமார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil france to tighten security at churches
வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அரசுக்கு வேண்டுகோள்..!!


வடக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள்,அங்கிருந்த மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது மட்டுமின்றி 84 வயதான பாதிரியாரையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரான்ஸ் காவல்துறையினர்,தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் சுட்டுக்கொன்று பணயக்கைதிகளை மீட்டனர்.இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக இருக்கக்கூடிய மதவழிபாட்டுத்தளங்களின் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவுக்கு அந்நாட்டின் அனைத்து மத குருமார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மத நல்லிணக்கம் குறித்த பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் கலந்து கொண்ட விழா ஒன்றில் இந்த கோரிக்கை ஹோலண்டேவிடம் முன்வைக்கப்பட்டது.இதற்கு சம்மதம் தெரிவித்த ஹோலண்டே,ஐரோப்பிய நாடுகள் இந்த அளவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியதில்லை எனவும் தீவிரவாதத்திற்கு எதிரான சட்டதிட்டங்கள் பிரான்சில் கடுமையாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி