ஆப்நகரம்

ஜார்ஜ் சாண்டர்ஸ் எழுதிய முதல் நாவலுக்கே மேன் புக்கர் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவரின் ‘லிங்கன் இன் தி பார்டோ’ என்ற நாவலுக்கு 2017ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது.

TNN 18 Oct 2017, 3:42 pm
அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவரின் ‘லிங்கன் இன் தி பார்டோ’ என்ற நாவலுக்கு 2017ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது.
Samayam Tamil george saunders wins 2017 man booker prize for lincoln in the bardo
ஜார்ஜ் சாண்டர்ஸ் எழுதிய முதல் நாவலுக்கே மேன் புக்கர் பரிசு


இலக்கியத்திற்கு உலக அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்று மேன் புக்கர் பரிசு. 1969ஆம் ஆண்டு முதல் இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி உள்பட பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சாண்டர்ஸ் என்ற எழுத்தாளரின் லிங்கன் இன் தி பார்டோ என்ற முதல் நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

1862ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவரது மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

இந்த விருதுக்காக போட்டியிட்ட 144 நாவல்களில் ஜார்ஜ் சாண்டர்ஸ் எழுதிய நாவல் பரிசை வெற்றிருக்கிறது. இந்த விருதை வென்றதன் மூலம் பால் பீட்டிக்குப் பிறகு புக்கர் பரிசு வென்ற இரண்டாவது அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி