ஆப்நகரம்

கத்திரிக்காயை வெடிகுண்டு என்று எண்ணி சோதனை செய்த போலீசார்

ஜெர்மனியில் கத்திரிக்காயை வெடிகுண்டு என்று முதியவர் ஒருவர் கூறியதையடுத்து போலீசார் சோதனை செய்த சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 18 Nov 2017, 5:40 pm
ஜெர்மனியில் கத்திரிக்காயை வெடிகுண்டு என்று முதியவர் ஒருவர் கூறியதையடுத்து போலீசார் சோதனை செய்த சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil german man finds unexploded wwii bomb in backyard binjal
கத்திரிக்காயை வெடிகுண்டு என்று எண்ணி சோதனை செய்த போலீசார்


ஜெர்மனியைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பெரிய வெடிகுண்டு கிடப்பதாகவும், அது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து முதியவர் வீட்டிற்கு சென்ற போலீசார், அதை சோதனை செய்த பார்த்து அதிர்ச்சியடைந்து முதியவரை ஏளனத்தோடு பார்த்தனர்.

காரணம், முதியவர் கூறியது உண்மையில் வெடிகுண்டு அல்ல. அது 40 செ.மீ நீளமுள்ள பெரிய கத்திரிக்காய். இதைத்தான் அந்த முதியவர் வெடிகுண்டு என்று தவறாக நினைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கத்திரிக்காயை வெடிகுண்டு என்று எண்ணி போலீசார் சோதனை செய்த சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி