ஆப்நகரம்

தீவிரவாதத்தை அழிக்காமல், இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான்; கோபத்தில் அமெரிக்கா!

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை, இந்தியா நோக்கி பாகிஸ்தான் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 12 Feb 2018, 5:02 pm
டெல்லி: அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை, இந்தியா நோக்கி பாகிஸ்தான் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
Samayam Tamil given by us to fight taliban pak uses missile to target
தீவிரவாதத்தை அழிக்காமல், இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான்; கோபத்தில் அமெரிக்கா!


பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை அழிக்க US TOW-2A என்ற ஆயுதத்தை பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வழங்கியது.

இது எதிரிகளின் ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. இதேபோல் மேலும் சில ஆயுதங்களையும் வழங்கியுள்ளது.

இதற்கிடையில் 2016ஆம் ஆண்டு, இந்தியாவை மிகப்பெரிய பாதுகாப்பு நட்பு நாடாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள், டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. அவை அமெரிக்க பிரதிநிதிகளிடம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.

தீவிரவாதத்தை அழிக்க ஆயுதங்கள் வழங்கினால், அண்டை நாட்டுடன் போரிட பாகிஸ்தான் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

Given by US to fight Taliban, Pak uses missile to target.

அடுத்த செய்தி