ஆப்நகரம்

நிலம் வாங்க வைத்திருந்த ரூ.16 லட்சம் பணத்தை, மரணப் பசியில் தின்று தீர்த்த ஆடு!

ரனிலோவிக்: லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை, ஆடு ஒன்று தின்று தீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 4:44 pm
மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே உள்ள கிராமம் ரனிலோவிக். இங்கு சிமிக் இனக் குடும்பம் ஒன்று விவசாயம் செய்து வருகிறது. இவர்கள் புதிதாக 10 ஹெக்டேர் நிலத்தை வாங்கி, தங்கள் குடும்ப விவசாயத்தை விரிவாக்க திட்டமிட்டிருந்தனர்.
Samayam Tamil Goat


எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் நிலம் வாங்குவது தொடர்பாக, விற்பனையாளரைச் சந்திக்க குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளனர். அப்போது நிலம் வாங்கத் தேவையான பணத்தை டேபிளில் வைத்து விட்டு, கதவை மூடாமல் சென்றுள்ளனர்.

இந்த சூழலில் அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கு டேபிளில் இருந்த பணத்தைக் கண்டது. கடுமையான பசியில் இருந்த ஆடு, பணக் கட்டுகளை கடித்து தின்றுள்ளது.

வீடு திரும்பிய விவசாயக் குடும்பத்தினர், பணத்தின் எஞ்சிய துண்டுகள் கீழே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெளியில் வந்து சோதித்த போது, ஆடு ஒன்றின் வாயில் சில ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

இதன்மூலம் ஒட்டுமொத்த ரூ.16 லட்சம் பணத்தையும் ஆடு தின்று தீர்த்துள்ளதை அறிந்தனர். இதனால் அந்த குடும்பம் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி