ஆப்நகரம்

விட்டுடறேன்... எல்லாத்தையும் விட்டுடறேன்... மோடிக்கு உறுதியளித்த கோத்தபய

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மீனவப் படகுகள் அனைத்தையும் விடுவிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ச அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2019, 7:53 pm
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று இந்திய பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்தார். பிரதமருடனான இந்த சந்திப்புக்குப் பிறகு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மீனவப் படகுகள் அனைத்தையும் விடுவிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ச அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil boats


சந்திப்பின் போது, ராஜபக்சவுக்கு இப்போது வழங்கப்பட்டிருக்கும் கடமையானது, இலங்கைஅயிஅ இன்னும் வலிமையாக்க மக்கள் கொடுத்திருக்கும் வாய்ப்பு என்று தெரிவித்தார். மேலும் இலங்கையும் இந்தியாவும் ஒரு வலிமையான பிணைப்பை பகிர்ந்து கொள்ளும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.



மேலும், இந்தியா எல்லாச் சூழ்நிலைகளிலும் தீவிரவாதத்தை எதிர்த்து பணியாற்றிவந்துள்ளது. மேலும் சுமார் 50 மில்லியன் டாலர் பணத்தை தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக இலங்கைக்கு இந்தியா கடனாக வழங்குவதாகவும் அறிவித்தது.

மேலும், நாட்டு வலிமைக்காக சுமார் 400 மில்லியன் டாலர் கடனாக வழங்கப்படுவதாகவும் அறிவித்தது.



இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக, இந்தியாவின் வீடு கட்டும் திட்டம் சார்பில் சுமார் 46,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் கூடுதலாக 14000 வீடுகள் அமைகக்வும் திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு சோலார் அமைக்கும் திட்டத்துக்காக, 100 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த செய்தி