ஆப்நகரம்

ராஜபக்ச குடும்பத்திலிருந்து இன்னொருவர்... இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச!!

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம், ஞாயிற்றுக்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 19 Nov 2019, 12:06 pm
இலங்கையின் அதிபராக உள்ள மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9 -ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, இலங்கையின் 7 -ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் சனிக்கிழமை (நவம்பர் 16) நடைபெற்றது.
Samayam Tamil krs


மொத்தம் 12,845 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 80% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த உடனே, நேற்று மாலையே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இந்தத் தேர்தலில் பொது ஜன பெரமுனா, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த கோத்தபய ராஜபக்சே!

இவர்களில் பொது ஜன பெரமுனா கட்சி வேட்பாளரான கோத்தபய ராஜபட்சவுக்கும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின்போது இருவரும் மாறி, மாறி முன்னிலை வகித்து வந்தனர்.


வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கோத்தபய ராஜபக்ச 52. 25 % வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்ததாக, சஜித் பிரேமதாசவுக்கு 41.99% வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு மொத்தம் 55,64, 239 வாக்குகள் பதிவாகியுள்ளன.

யார் அடுத்த இலங்கை அதிபர்? மாறி, மாறி முன்னிலை பெறும் சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்ச!

நாளை பதவியேற்பு :
அனுராதாபுரத்தில் திங்கள்கிழமை காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், இலங்கையின் 7 -ஆவது அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்கிறார்.

ராஜபக்ச வாழ்த்து : இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமது சகோதரரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த கோத்தபய ராஜபக்சவுக்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்துள்ளார்..

நெருக்கடி அதிகரிக்கும் :
இலங்கை அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதால், ஈழத்தமிழர்கள் மீதான நெருக்கடியும், ஒடுக்குமுறையும் அதிகரிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அச்சம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி