ஆப்நகரம்

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த கோத்தபய ராஜபக்சே!

இலங்கையின் அடுத்த அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அவர் தற்போது 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.

Samayam Tamil 17 Nov 2019, 11:50 am
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil Gotabaya1


மொத்தம் 12,845 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 80% வாக்குகள் பதிவாகின. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்த உடனே, சிறிது நேரத்திற்குள் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

யார் அடுத்த இலங்கை அதிபர்? மாறி, மாறி முன்னிலை பெறும் சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்ச!

இதில் பொது ஜன பெரமுனா, புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. தொடக்கம் முதலே இருகட்சிகளின் வேட்பாளர்களான கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோர் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

இந்த சூழலில் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகளை கோத்தபய ராஜபக்சே தாண்டியுள்ளார். இதன்மூலம் அதிபராக அவரது வெற்றி உறுதியாகி விட்டது. சமீபத்திய நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே 42,83,432 வாக்குகளும், சஜித் பிரேமதாசா 37,07,296 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு... 69 இடங்களில் வன்முறை

இந்த சூழலில் இலங்கை அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றியை தொண்டர்கள் அமைதியாக கொண்டாடுமாறு பொது ஜன பெரமுனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன் என்றும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல்: மன்னாரில் துப்பாக்கிச் சூடு!

அடுத்த செய்தி