ஆப்நகரம்

இந்தியாவில் நீட் தேர்வு நடத்துவது மோசமானது: கிரேட்டா துன்பர்க் ஆவேசம்

தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்​ என்று பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 9:49 am
சூழலியல் மீட்டெடுப்பு மற்றும் பருவகால அவசரநிலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டங்கள் மூலம் பொதுவெளிக்கு அறிமுகமான சிறுமி கிரேட்டா துன்பர்க். சுழலியலுக்காக நடத்தப்பட்ட உலகளாவிய மாநாட்டில் “எவ்வளவு தைரியம் உங்களுக்கு” என்ற துணிச்சல் மிகுந்த வார்த்தையால் உலகம் முழுக்க அறியப்பட்டார்.
Samayam Tamil greta thunberg


கடந்த சில வாரமாக உலக நாடுகளின் பிரச்சினைகளையும் குறிவைத்து கேள்விகளையும், பதிவுகளையும் இட்டு வருகிறார். அனதவகையில், இந்திய மாணவர்களின் பிரச்சினையான கொரோனா கால நுழைவுத்தேர்வுகள் குறித்து கிரேட்டா துன்பர்க் குரலெழுப்பியுள்ளார்.

நாடு முழுக்க கொரோனாப் பேரிடர் கவலை இன்னும் குறையாத நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி நாடு முழுக்க நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

எனினும் மாணவர்கள் உயிருடன் விளையாடுவதா என்ற ககேள்வியுடன், நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்நிலையில்தான் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் கிரேட்டா.


இது தொடர்பாக கிரேட்டா வெளியிட்ட ட்வீட்டில் “ஏற்கனவே இந்தியாவில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுப்போக லட்சக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், மாணவர்களை தேர்வு மையங்களில் அமர்த்த முயற்சிக்கிறது இந்தியா. இது முற்றிலும் மோசமானது” என்று தெரிவித்துள்ளார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்