ஆப்நகரம்

அச்சுறுத்தும் டெல்டா பிளஸ்: 1 மாதத்திற்கு அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு!

டெல்டா பிளஸ் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அறிவித்துள்ளார்

Samayam Tamil 14 Aug 2021, 8:21 pm

ஹைலைட்ஸ்:

  • குவாத்தமாலாவில் அதிகரிக்கும் டெல்டா பிளஸ் கொரோனா
  • அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Curfew
குவாத்தமாலா நாட்டில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த வகை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம்.

இந்நிலையில், டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அவசர நிலை பிரகடனத்தை, அந்நாட்டு அதிபர் அலேஜன்டரோ ஜியாம்மெட்டை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
திறக்கப்படுகிறது பள்ளிகள்: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்!
இதற்கு குவாத்தமாலா மட்டும் விதி விலக்கு இல்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இந்த நடைமுறை ஒரு மாதத்திற்கு கடைபிடிக்கப்படும். மேலும் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. கொரோனா பரவல் நிலைமைக்கு ஏற்ப தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி