ஆப்நகரம்

இறுதிச் சடங்கில் நிகழ்ந்த கொடூர சம்பவம்... குறிவைக்கப்படும் இளைஞர்கள்!!

சாலை விபத்தில் மரணம் அடைந்த இளைஞரின் இறுதிச்சடங்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Sep 2020, 11:22 pm
மெக்சிகோவின் குர்னாவாகா நகரில் சாலை விபத்தில் இறந்த இளைஞர் ஒருவரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் விபத்தில் பலியான நபரின் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Samayam Tamil gunfire


அப்போது திடீரென துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துபாக்கிச்சூடு நடத்தினர். இதனைக் கண்டு அங்குகூடி இருந்தவர்கள், பதறியடித்தப்படி சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இக்கொடூர நிகழ்வு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்க சவகாசமே வேணாம் - அடம்பிடிக்கும் ட்ரம்ப்

இதே நகரில் கடந்த மாதம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், வீதியில் மது அருந்திக் கொண்டிருந்த ஆறு இளைஞர்கள சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி