ஆப்நகரம்

முதியோர்களின் வழிகாட்டல் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியம்!

உலகம் முழுவதும் இன்று சர்வதேச முதியோர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 1 Oct 2018, 10:56 am
முதியோரை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச முதியோர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil சர்வதேச முதியோர் தினம்
சர்வதேச முதியோர் தினம்


வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கருத்தில் கொண்டுதான் முதியோருக்கான தனி தினமும், சிறப்பு திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இன்றைய சூழலில், முதியோருக்கான சுதந்திரம், பங்களிப்பு, வயதில் மூத்தவர்களை மதித்தல் போன்றவற்றை நடைமுறையில் முழுவதுமாக சாத்தியமாக்குவது தான் இந்த தினத்தின் மூலக்கூறு.

மனிதர்களுக்கு வயது கூடக்கூட அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தல், முழுமையடைதல், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல், சமூகம், கலாசாரம், அரசியல் போன்றவற்றிலும் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்தல் ஆகியவை அவசியம்.

சர்வதேச முதியோர் தினம்


மருத்துவர்களின் ஆய்வின்படி பெரும்பாலான முதியோரின் உடல்நலக்குறைவுக்குக் காரணம் மனஅழுத்தம், கவலைகள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பதற்றம் என்று சொல்லப்படுகிறது.

முதியவர்களை மற்றவர்களைப்போலப் பார்க்காமல் அவர்களது உடல் மற்றும் மன நலனில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம். மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக தன்னம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.

முதியோர்களின் வழிகாட்டல் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியம்!


ஆனால் பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் தான் நடக்கிறது.

முதியோர்களின் அறிவு மற்றும் வழிகாட்டி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது முதியோர்களை கவனிக்க முன்வர வேண்டும்.

அடுத்த செய்தி