ஆப்நகரம்

குலை நடுங்க வைத்த எஸ்எம்எஸ்: பீதியில் உறைந்த ஹவாய் மக்கள்

ஹவாய் தீவில் ஏவுகணை தாக்குதல் நடக்கப்போவதாக எஸ்எம்எஸ் மூலம் பரவிய தவறான செய்தியால் அந்நாட்டு மக்கள் பீதிக்கு உள்ளாயினர்.

Samayam Tamil 14 Jan 2018, 10:44 am
ஹவாய் தீவில் ஏவுகணை தாக்குதல் நடக்கப்போவதாக எஸ்எம்எஸ் மூலம் பரவிய தவறான செய்தியால் அந்நாட்டு மக்கள் பீதிக்கு உள்ளாயினர்.
Samayam Tamil hawaii officials mistakenly warn of inbound missile
குலை நடுங்க வைத்த எஸ்எம்எஸ்: பீதியில் உறைந்த ஹவாய் மக்கள்


அமெரிக்காவின் ஹவாய் தீவில் சனிக்கிழமை காலை பரவிய எஸ்எம்எஸ் ஒன்று அனைவரையும் பீதிக்கு ஆளாக்கியது. "பேரழிவை ஏற்படுத்தும் ஏவுகணை தாக்குதல் ஹவாய்யில் நடக்கப்போகிறது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்." என்று அந்த எஸ்எம்எஸ் கூறியது.

இதைப் படித்த மக்கள் அனைவரும் பீதியாக சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலைப் பகிர்ந்துகொண்டனர். ஆனால், அடுத்த பத்து நிமிடங்களிலேயே இது தவறான செய்தி என்றும் யாரும் இதை நம்பி, பகிர வேண்டாம் மற்றொரு தகவல் வந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹவாய் மாகாண ஆளுநர் டேவிட், “பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஊழியர்கள் தவறான பட்டன் அழுத்தப்பட்டதால் தவறான செய்தி பரவிவிட்டது என்றும் இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க ராணுவத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைமையிடமாக ஹவாய் உள்ளது. வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைக்கு முக்கியக் காரணமாக இருந்தது உள்ளிட்ட பல செயல்பாடுகளால் அமெரிக்கா மீது வடகொரியா வெறுப்பில் உள்ளதன் பின்னணியில், இந்த வதந்தி கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி