ஆப்நகரம்

ஜப்பானில் 7 அடி உயரத்துக்கு வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு!

ஜப்பானில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 20 Dec 2020, 6:04 pm
டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை உலகின் பல நாடுகளில் கடும் பனிப்பொழிவு இருக்கும். அந்த வகையில், ஜப்பான் நாட்டில் வரலாறு காணாத அளவு பணிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக 7 அடி வரையில் பனி சூழ்ந்துள்ளதால் அந்நாட்டில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil ஜப்பான் பனிப்பொழிவு
ஜப்பான் பனிப்பொழிவு


ஜப்பானின் டோக்கியோ நிகாட்டா நகரங்களை இணைக்கும் கான்-எட்சூ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால், கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்களில் பயணம் செய்தோர் சுமார் 40 மணி நேரமாக கடும் குளிரில் சிக்கித் தவித்ததால் அவர்களுக்கு தேவையாக உணவு பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன.

உடல் நிலை பாதிக்‍கப்பட்ட சிலரை மீட்டு போக்‍குவரத்து அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களுக்‍கு இதே நிலை தான் நீடிக்‍கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்நாட்டின் வடக்குப் பகுதி நகரங்களில் ஏற்பட்டுள்ள இந்த பனிப்பொழிவால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, பனி மற்றும் பனிச்சரிவு உள்ளிட்டவைகள் ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்!

அதேபோல், அமெரிக்காவில் இந்த ஆண்டின் பனிக்‍காலம் சில நாட்களுக்‍கு முன் தொடங்கிய நிலையில், தற்போது பனிப்பொழிவு அதிகரித்துவருகிறது. நியூயார்க்‍ நகரில் சாலைகளில் அதிக அளவு பனி படர்ந்திருந்ததால் அதை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த நாட்டின் நாட்டின் வடகிழக்‍கு பகுதியிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி