ஆப்நகரம்

இந்து பூசாரி கழுத்தை அறுத்துக் கொலை : வங்க தேசத்தில் பயங்கரம்

வங்க தேசத்தில் இந்துக் கோவில் பூசாரி ஒருவர் ​மர்மநபர்களால் கழுத்தை அறுத்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

TNN 7 Jun 2016, 1:58 pm
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில், இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக வங்கதேசத்தில் வாழும் இந்துக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்துள்ளன.
Samayam Tamil hindu priest killed in bangladesh
இந்து பூசாரி கழுத்தை அறுத்துக் கொலை : வங்க தேசத்தில் பயங்கரம்


இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைப்பது, கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவது, இந்துக் கோவிலை இடித்து தள்ளுவது என பல சம்பவங்கள் வங்கதேசத்தில் அரங்கேறி வருகின்றன.இந்த சம்பவங்களின் பிண்ணனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா இயக்கங்கள் இருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் வங்கதேசத்தின் மேற்கு ஜினாய்கா மாவட்டத்தில் இந்துக் கோவில் பூசாரியான ஆனந்த கோபால் கங்குலி என்பவரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இன்று காலை நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

அடுத்த செய்தி