ஆப்நகரம்

நிரூபணமான 2.0 விபரீதம்; 5ஜி கதிர்வீச்சால் கொத்து, கொத்தாக செத்து விழுந்த பறவைகள்!

ஹாக்: கதிர்வீச்சு காரணமாக பறவைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 2 Dec 2018, 7:36 pm
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள 2.0 படத்தில் செல்போன் கதிர்வீச்சுகளால் பறவைகளுக்கு உயிரிழக்கும் அதிர்ச்சி உண்மை முக்கிய கதைக்கருவாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் 4ஜி செல்போன் சேவை தற்போது அமலில் இருக்கின்றது.
Samayam Tamil Birds


இதையடுத்து 5ஜி செல்போன் சேவைக்கு சில நாடுகள் மாறியுள்ளன. சில நாடுகள் சோதனை செய்து வருகின்றன. இதன்மூலம் அதிவேகம், துல்லியம் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள ஹாக் நகரில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, ஹுகைன்ஸ் பூங்காவில் திடீரென நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து விழுந்தன.

அருகே உள்ள குளத்தில் நீந்திக் கொண்டிருந்த பறவைகள், உடனடியாக தங்கள் தலையை தண்ணீருக்குள் மூழ்கடித்தன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பறவையியல் அறிஞர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உயிரிழந்த பறவைகளை சோதித்தனர்.

அதில் வைரஸ் பாதிப்போ, நோய் தொற்றோ, விஷத் தாக்குதலோ இல்லை என்று தெரியவந்தது. இதனால் பறவைகள் இறப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மருத்துவம் சார்ந்த ”எரின் எலிசபெத்” என்ற வலைப்பக்கத்தில் முக்கியத் தகவல் ஒன்று வெளியானது.

அதில் பறவைகள் உயிரிழந்த அதேசமயம், ஹாக் நகரில் 5ஜி அலைக்கற்றைகள் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கதிர்வீச்சால் பறவைகள் உயிரிழந்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பறவைகள் உயிரிழப்புக்கு 5ஜி சோதனை காரணமா என்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. இருப்பினும் 5ஜி கதிர்வீச்சு காரணமாகவே பறவைகள் உயிரிழந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி