ஆப்நகரம்

டிரம்ப் குறித்து கவலை இல்லை: தலாய் லாமா

அமெரிக்க அதிபராக தேர்வாகியிருக்கும் டொனால்ட் டிரம்ப் குறித்து தனக்கு கவலை இல்லை என ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

TNN 23 Nov 2016, 10:32 am
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியிருக்கும் டொனால்ட் டிரம்ப் குறித்து தனக்கு கவலை இல்லை என ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i have no worries about donald trumps election as u s president dalai lama
டிரம்ப் குறித்து கவலை இல்லை: தலாய் லாமா


திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் மற்றும் உலகளவில் முக்கிய தலைவராகவும் கருதப்படும் தலாய்லாமா, சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் இந்தியாவின் தர்மசாலாவில் வாழ்ந்து வருகிறார்.

தனது நாட்டின் ஒரு பகுதியாக திபெத்தை சீனா அறிவித்துள்ள நிலையில், திபெத்தை தனிநாடாக திபெத்தியர்களிடம் வழங்க வேண்டுமென்று தலாய்லாமா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்படும் திபெத்திய அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தலாய்லாமா நாடு திரும்ப வேண்டும் என புத்த மத துறவிகள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.

அதேபோல், தலாய்லாமா நாடு திரும்பும் உரிமைக்கு பகிரங்கமாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், சீனாவில் சிறைகளில் வாடும் திபெத்திய அரசியல் கைதிகளை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு வலியுறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க எம்.பி.,-கள், அதிபர் ஒபாமாவிற்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர்.

இதனிடையே, ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் பதிவிக்கு இவர் தேர்வானால், வேறு மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சினர். ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களின் ஆதரவுடன் தேர்வானார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வாகியிருக்கும் டொனால்ட் டிரம்ப் குறித்து தனக்கு கவலை இல்லை என சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி மங்கோலிய நாட்டுக்கு சென்றுள்ள ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். நான்கு பயனத்தை மங்கோலியாவில் முடிந்துக் கொண்ட அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலின் போது கருத்துகளை தெரிவிக்க, வேட்பாளர்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. ஆனால், தேர்வான பின்னர், அவர்களுக்கென்று பொறுப்பு உள்ளது. உண்மை நிலையை புரிந்து கொண்டு அவர்கள் செயலாற்ற வேண்டும். எனவே, டிரம்ப் குறித்து எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்றும் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த அமைதியை விரும்பும் தலைவராக கருதப்படும், அவரது கருத்து, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
I have no worries about Donald Trump's election as U.S. president: Dalai Lama

அடுத்த செய்தி