ஆப்நகரம்

பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் சச்சினுக்கு கல்தா - இந்த வீரர்களுக்கு மட்டும் அழைப்பு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் பதவியேற்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், கவாஸ்கர், நவ்ஜத் சிங் சித்து ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 10 Aug 2018, 10:23 pm
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் பதவியேற்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், கவாஸ்கர், நவ்ஜத் சிங் சித்து ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil imran-khan


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 25ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் முடிவு 26ம் தேதி முழுமையாக வெளியானது. இதில் பாகிஸ்தான் தெஹரிக்-இ-இன்சாஃப் கட்சி தலைவர் இம்ரான் கான் அமோக வெற்றி பெற்று பிரதமராக உள்ளார்.

இவர் பாகிஸ்தான் சுதந்திர தினமான் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவிப்பு :
இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், கவாஸ்கர், நவ்ஜத் சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் 1992ல் பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற சமயத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைன் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

அடுத்த செய்தி