ஆப்நகரம்

எதிரிகளை விளாசிய அமெரிக்க அதிகாரிக்கு இந்தியா பாராட்டு

அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்த பாகிஸ்தான் மற்றும் சீனா குறித்த கருத்துக்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது.

TOI Contributor 20 Oct 2017, 3:36 pm
டெல்லி: அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்த பாகிஸ்தான் மற்றும் சீனா குறித்த கருத்துக்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil india appreciates rex tillersons pro india speech
எதிரிகளை விளாசிய அமெரிக்க அதிகாரிக்கு இந்தியா பாராட்டு


பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், சீனா அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறும் செயல்களை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கொள்கையாகக் கொண்டிருப்பதாவும் பயங்கரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு நம்பகமான நட்பு நாடு ஒன்று தேவைப்படுகிறது. அமெரிக்கா அந்த தேவையை பூர்த்தி செய்யும் என்றும் டில்லர்சன் பேசினார்.

காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் பாகிஸ்தானும் டோக்லாம் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் சீனாவும் இந்தியாவுடன் மோதல் போக்கைத் தொடரும் நிலையில் அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த பேச்சு இந்தியாவிற்கு சாதகமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், “அமெரிக்க செயலர் ரெக்ஸ் டெல்லர்சன் கூறிய நேர்மறையான மதிப்பீடுகள் எதிர்காலத்தில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது

அடுத்த செய்தி