ஆப்நகரம்

இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இன்று 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 21 Sep 2020, 6:35 pm

இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பிரச்சினையை பேசித் தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பல்வேறு தருணங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
Samayam Tamil India China Talks


பேச்சுவார்த்தையில் இதுவரை முன்னேற்றம் இல்லை. எனினும், அமைதியாக பேச்சுவார்த்தை மூலமாகவே எல்லைப் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக இருநாடுகளும் கூறி வருகின்றன.

இதுவரை இந்தியா, சீனா இடையே ஐந்து கட்ட ராணுவ பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சீன எல்லைக்குள் இருக்கும் மோல்டோ பகுதியில் காலை 9 மணிக்கு இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தை தொடங்கியது.

பயங்கரவாதிகளுக்கு விஐபி அந்தஸ்து - பாகிஸ்தானின் இரட்டை வேடம்!

இந்திய ராணுவத்தின் 14ஆம் பட்டாளத் தளபதி ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்தியக் குழுவும், சீன ராணுவத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லின் லியு தலைமையிலான இந்திய குழுவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லையில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் இதுவரை தெப்சங் குறித்து விவாதிக்கப்படவில்லை. இன்றைய பேச்சுவார்த்தையில் தெப்சங் குறித்து இந்திய குழு வாதிடுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், பேங்காங் ஏரி அருகே நிலவும் பதற்றமான சூழல் பற்றியும் இருதரப்பு அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனர். கல்வான், கோக்ரா ஆகிய பகுதிகளை விட்டு வெளியேறியுள்ள சீனா, பேங்காங்கை விட்டு வெளியேற தயங்குவது ஏன் என்று இந்திய குழு கேள்வியெழுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி