ஆப்நகரம்

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளது: சிரியா

தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில், சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் முக்கிய பங்கு உள்ளதாக, சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் தெரிவித்துள்ளார்.

TNN 21 Aug 2016, 10:35 pm
தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில், சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் முக்கிய பங்கு உள்ளதாக, சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil india has a role to play in combating terror bashar al assad
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளது: சிரியா


சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரை எதிர்த்து, அந்நாட்டு படைகளுடன், ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளும் போரிட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு இணையமைச்சர் அக்பர், சிரியா சென்றபோது, அதிபர் பஷார் அல் அஸாத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, அடிப்படையில் மதச்சார்பற்ற நாடாக இருந்தபோதிலும், தற்போது தீவிரவாதத்திற்கு எதிராகப் போரிடுவதில் சிரியா கவனம் செலுத்திவருவதாக, அல் அஸாத் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில், வளரும் நாடுகளில் முக்கிய சக்தியாக உள்ள இந்தியாவுக்கும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் முக்கிய பங்குள்ளது.

மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக, இந்தியா செயல்பட வேண்டும் என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், சிரியாவும் இணைந்து இயங்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அதிபர் அல் அஸாத் குறிப்பிட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி