ஆப்நகரம்

எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்: சீன ஊடகம் வலியுறுத்தல்

எல்லை பிரச்னையில், இந்தியாவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனக் கூறி, சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

TNN 28 Jun 2017, 6:02 pm
எல்லை பிரச்னையில், இந்தியாவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனக் கூறி, சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Samayam Tamil india needs to be taught the rules chinese media on border issue
எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்: சீன ஊடகம் வலியுறுத்தல்


இந்தியாவில் இருந்து, ஆண்டுதோறும் ஆன்மிக யாத்ரீகர்கள், இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு யாத்திரை செல்வது வழக்கமாகும். இந்த பகுதி திபெத்தில் இருந்தாலும், அது சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், சீனா கடுமையான சோதனைகளை இங்கு மேற்கொள்கிறது.

இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, நாதுலா கணவாயில் இருந்து, மானசரோவர் செல்ல முயன்ற இந்திய யாத்ரீகர்களை அனுமதிக்க முடியாது எனக் கூறி, சீனா திருப்பி அனுப்பிவிட்டது.

இந்த சம்பவம், இந்திய ராஜிய வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கோரினாலும், சீனா, சரியான பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையே, இதுபற்றி சீன அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கு எல்லை விவகாரத்தில் சரியான புரிதல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதில், சீனா பின்பற்றும் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் பற்றி அந்நாட்டுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொடர்ந்து எல்லையில் விதிமீறல் செய்தால், அதற்கு தகுந்த விலையை இந்தியா கொடுக்க நேரிடும் என்றும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

As New Delhi and Beijing trade accusations of intruding into each others' territory, a furious China on Wednesday used state-run media to call India "unruly" and say it "needs to be taught the rules".

அடுத்த செய்தி