ஆப்நகரம்

இலங்கையின் கண்ணீரை துடைக்க நிவாராணக் கப்பல்களை அனுப்பிய இந்தியா...!

இலங்கையின் கண்ணீரை துடைக்க நிவாராணக் கப்பல்களை இந்தியா அனுப்பியுள்ளது.

TNN 28 May 2017, 11:11 am
கொழும்பு: இலங்கையின் கண்ணீரை துடைக்க நிவாராணக் கப்பல்களை இந்தியா அனுப்பியுள்ளது.
Samayam Tamil india sends two ships to srilanka for rescue operation
இலங்கையின் கண்ணீரை துடைக்க நிவாராணக் கப்பல்களை அனுப்பிய இந்தியா...!


இலங்கையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவத்தை அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது.

மேலும் சர்வதேச உதவியையும் நாடியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளிக்க, இந்தியா 2 கப்பல்களை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் அடுத்த 48 நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு, இலங்கையில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

India sends two ships to Srilanka for Rescue Operation.

அடுத்த செய்தி