ஆப்நகரம்

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதித்த முதல் இந்தியக் குழு; அதுவும் ஆக்சிஜன் இல்லாமல்...!

எவரெஸ்ட் சிகரத்தை ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி, ஏறி இந்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

TNN 4 Jun 2017, 2:46 pm
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தை ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி, ஏறி இந்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
Samayam Tamil indian army team scales everest
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதித்த முதல் இந்தியக் குழு; அதுவும் ஆக்சிஜன் இல்லாமல்...!


உலகின் மிக உயரமான சிகரமாக விளங்குவது எவரெஸ்ட். அதன் உயரம் 8,848 மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து குழுவினராக வந்து, எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதுவரை சாதனை படைத்தவர்களின் எண்ணிக்கை 4000க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 187 இந்தியர்கள் தனி நபர்களாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி ஏறி சாதனை படைத்துள்ளனர். இந்த சூழலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளது. அவர்கள் குஞ்சோ டென்டா, கெல்ஜங் டோர்ஜி பூட்டியா, கெல்டன் பஞ்சூர், சோனம் புன்ஸ்சோக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஸ்னோ லைன் எவரெஸ்ட் பயணக்குழுவின் தலைவர் விஷால் துபே செய்தியாளர்களிடம் பேசினார். ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் குழு என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

An Indian Army team has become the first in the world to scale Mt Everest without the use of supplementary oxygen supply.

அடுத்த செய்தி